மியான்மர் ஜனாதிபதி தேர்தலில், அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் போட்டியிட தடை விதிப்பது அர்த்தம் அற்றது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கண்டனம் தெரிவித்தார்.
மியான்மரில் அடுத்தாண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு, ஜனநாயக மீட்புக்காக தன்னையே அர்ப்பணித்த எதிர்க்கட்சி தலைவி ஆங் சான் சூகி தேர்தலில் போட்டியிட முடியாது.
அவரது மகன்கள் இருவர், வெளிநாட்டு குடிமகன்கள் என்பதால் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் அரசியல் சட்டப்பிரிவு தடையாக இருக்கிறது.
இந்த நிலையில், கிழக்காசிய உச்சி மாநாட்டுக்கு மியான்மர் சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, யாங்கோனில் எதிர்க்கட்சி தலைவர் சூ கி-யை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்.
இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறும் விதத்தில் கட்டித்தழுவி முத்தமிட்டனர்.
எதிர்க்கட்சி தலைவர் சூ கி அதிபர் தேர்தலில் போட்டியிட தடையாக சட்டப்பிரிவை காட்டுகிறார்கள். ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவரது பிள்ளைகளை தடையாக காட்டுகிற சட்டப்பிரிவு அர்த்தம் அற்றது என ஜனாதிபதி கண்டனம் தெரிவித்தார்.
ஜனநாயக கண்ணோட்டத்தில் பார்த்தால், குறிப்பிட்ட ஒருவருக்கு எதிராக பாரபட்சம் காட்டுவது என்பது சரியானது அல்ல” எனவும் ஒபாமா கருத்து தெரிவித்தார்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.