↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

காதல் படத்தில் பரத்துடன் நடித்தவர் சந்தியா. அதையடுத்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவருக்கு சமீபகாலமாக வாய்ப்புகள் 
குறைந்து விட்டது. அதனால் யா யா என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த சந்தியாவுக்கு தாய்மொழியான மலையாளத்தில கைவசம் சில படங்கள் இருந்தபோதும் அங்கேயும் சிறிய கேரக்டர்களில்தான் நடித்து வருகிறாராம்.

இந்த நிலையில், சமீபகாலமாக சென்னையில் முகாமிட்டிருக்கும் சந்தியா, பொழுது போகாததால் தனது நண்பர்களுடன் காரில் ஜாலி டூர் அடிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆனால் அப்படி செல்லும்போது சில சமையங்களில் சரக்கு அடித்து விட்டும் கார் ஓட்டிச்செல்கிறாராம். அப்படி கடந்த வாரத்தில் ஒருநாள் அவர் சென்னை புறநகர் பகுதியில் கார் ஓட்டிச்சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த டிராபிக் போலீசார் வழிமறித்தபோது , இவர் சரக்கு அடித்திருப்பது தெரிய வர, ஸ்பாட் பைன் போட்டு விட்டார்களாம்.

அதனால் சில ஆயிரங்களை அந்த இடத்திலேயே கட்டிய, சந்தியா மீண்டும் காரை எடுத்தபோது, அவர் கார் ஓட்டுவதற்கு தடை விதித்த போலீசார், சந்தியாவுடன் சென்ற இன்னொரு நபரை வைத்து கார் ஓட்டுமாறு சொல்லி அனுப்பி வைத்தார்களாம். இந்த சம்பவத்துக்குப்பிறகு தற்போது தான் கார் ஓட்டுவதையே நிறுத்தி விட்டாராம் சந்தியா.

...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top