↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவில் ஹீரோயின் என்றாலே வந்தோமா, 4 படங்கள் நடித்தோமோ அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்தோமோ அல்லது சீரியலில் நடித்தோமோ என்று தங்கள் வாழ்க்கையை ஓட்டுவார்கள். 

ஆனால், ஒரு சிலர் தான் காலத்தையும் தாண்டி தமிழ் சினிமாவில் ஜொலித்தார்கள்.ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, குஷ்பு, சிம்ரன் ,ஜோதிகா இவர்கள் வரிசையில் நம் நெஞ்சங்களை இன்றும் கொள்ளை கொண்டிருக்கும் நயன்தாரா பற்றிய தொகுப்பு தான் இந்த பகுதி.கையில் இருக்கும் பணத்துடன் பஸ்ஸில் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தவர் தான் நயன்தாரா என சிலர் கூறுவார்கள். ஒரு சிலருக்கு தான் யோகம் உச்சத்தில் இருக்கும், அதேபோல் அந்த யோகம் நயனுக்கு இருந்தது. 

அதனால் தான் ஆரம்பத்திலேயே சரத்குமார், சூப்பர் ஸ்டார் என ஜோடி சேர்ந்து கலக்கினார். ஆனால், என்ன பண்றது தமிழ் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்றாலே நடிக்க தெரியாமல் இருக்க வேண்டும், கவர்ச்சி காட்ட தெரிந்தாலே போதும்.அதை புரிந்துகொள்ளாத நயன்தாரா சில நாட்களுக்கு பின் தான் தன் கவர்ச்சியால் தமிழ் சினிமாவை கலங்கடித்தார். 

இதற்கு பிறகு இவருக்கு படமும், பணமும் கூரையை பிய்த்து கொண்டு கொட்டியது. ஆனால், சிம்புவின் ஆசை வலையில் விழுந்து சின்ன பின்னமானர். உடனே சுதாரித்துக் கொண்டு அவர் எந்த கதநாயகியும் செய்ய துணியும் டூ பீஸ், ஹீரோக்களுடன் ஓவர் நெருக்கம் போன்ற காட்சியில் நடித்து அசத்தினார். அதற்காக சத்யம் படத்துல விஷாலுக்கு போட்டியா சிக்ஸ் பேக் வச்சதெல்லாம் ரொம்ப ஓவர் மேடம்.சும்மா சுக்ரன்னே இருப்பாரா, மீண்டும் சனிபகவான் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார் இவரது வாழ்க்கையில். 

ஆனால், மீண்டும் காதலில் விழுந்து சினிமாவை விட்டே ஒதுங்க முடிவு செய்தார். இதனால் சுமார் 4 வருடங்கள் சினிமாவிற்கு முழுக்கு போட்டார். அந்த காதலும் யார் கண் பட்டதோ தெரியவில்லை, பெயிலியரில் முடிய, நீலம்பரியை போல் மீண்டும் காலில் சலங்கையை கட்டி.. இனிமே தாண்டா என் ருத்ரதாண்டவத்த பார்க்க போறன்னு ‘ரிட்டன் ஆப் ராணியாக’ ராஜா ராணியில் மீண்டும் தன் இன்னிங்ஸை ஆரம்பித்தார்.

நடிக்க வந்த சில நாட்களிலேயே தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகிவிட்டார். ஆனால், மீண்டும் ஆர்யா, உதயநிதி, இது நம்ம ஆளுன்னு பார்ட்டி ரீ எண்ட்ரி கொடுக்க கிசுகிசு ஆரம்பித்தது, ஹிம்ம் இந்த முறை நான் ரொம்ப உஷாருன்னு, மேடம் படத்துல மட்டும் தான் கவனமா இருக்காங்க...வெரி குட் மேடம் ...உங்கள் சேவை தமிழ் நாட்டிற்கு தொடர்ந்து தேவை.. ஒரு நடிகன் 2 வருடம் நடிக்கை வில்லை என்றாலே மறந்து போகும் இந்த உலகில், 4 வருடங்கள் கழித்து வந்து சாதனை படைத்த நயன்தாரவிற்கு சல்யூட்.என்ன தான் காதல் தோல்வி, சர்ச்சை, சங்கடம் என இவரை பற்றி விமர்சித்தாலும் ஒரு பெண்ணாக இருந்து அனைத்து தடைகளையும் தாண்டி மீண்டும் தன் விட்ட இடத்தை பிடித்து, மற்ற பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும் நயன்தாரவிற்கு சினி உலகம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top