↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ‘நடுக்கடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா… ஒரு தலையா காதலத்தான் வெல்ல முடியுமா? என்று தனது கனீர் குரலில் சென்னை தமிழில் பாடல்களை பாட ஆரம்பித்த கானா பாலாவை, கோடம்பாக்க இயக்குனர்கள், கோழியை அமுக்குவது போல் ஒரே அமுக்கா அமுக்கி தூக்கி வந்து தங்கள் படங்கள் அனைத்திலும் பாட வைக்க ஆரம்பித்தனர்..

இப்போது அவர் பாடாத படங்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு கானாவை கடித்து கொதறிவருகின்றனர் . கானா பாலாவின் பாடல்கள் டாஸ்மாக் வரும் குடிமகன்களின் பேவரிட் சாங்காக இருந்த நிலையில் போதும் போதும் என்ற அளவிற்கு அவரை வைத்து தமிழ்சினிமா குடிகார பாடல்களை எடுத்துவிடட்து.

இந்நிலையில் இப்போதெல்லாம் படத்தில் கானா பாலாவின் குரல் கேட்டாலே பொம்பளைங்களும் தம்மடிக்க எழுந்து ஓடுவதால் மிரண்டு போயிருக்கிறது சினிமாவுலகம். ஏற்கனவே அவரை வச்சு பாட்டு எடுத்தாச்சு. இனிமே
என்ன பண்ணுறதாம்? என்கிற தயக்கத்தில் இருக்கிறார்கள் பலர்.

இந்த நிலையில்தான் வெளியுலகம் தெரியாத ஹாரிஸ் ஜெயராஜ், அவரை தன் இசையில் பாடவைத்திருக்கிறார். அதுவும் ஊர் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் அஜீத்தின் ‘என்னைஅறிந்தால்’ படத்திற்காக!

படு லோக்கலாக உருவாகிவரும் அதாரு உதாரு பாடலில்தான் கானா பாலாவின் கை வண்ணம்.எழுதியதும் அவரே. பாடியதும் அவரேதானாம். இந்த குரலுக்கு முதல் முறையாக வாயசைக்கப்போகிறார் அஜீத். கேட்கும்போதே கிடுகிடுங்குதேப்பா…!

.........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top