↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கண்ட நாள் முதல், வல்லவன், சென்னை 28 ஆகிய படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த பிரேம்ஜி, அதையடுத்து தோழா என்ற படத்தில் மூன்று 
ஹீரோக்களில் தானும் ஒருவராக நடித்தார். ஆனால் அந்த படம் ஓடவில்லை. அதனால் வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்று அதன்பிறகு ஹீரோவாக நடிக்கவில்லை.

அதேசமயம், தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா, மங்காத்தா, பிரியாணி உள்ளிட்ட படங்களில் தனது வழக்கமான அலம்பல்களை செய்து கொண்டு வந்த பிரேம்ஜி, நாரதர், மாஸ் ஆகிய படங்களிலும் அதே வேலையை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், மாங்கா என்ற படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்திருப்பவர். இரண்டு கெட்டப்புகளிலும் நடித்து வந்தார்.

ஆனால் அந்த படமே இன்னும் திரைக்கு வராத நிலையில், தற்போது டக்கர் என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார் பிரேம்ஜி. ஆனால் இதுவரை காமெடி கலந்த வேடங்களிலேயே நடித்தவர், மாங்கா படத்திலும் காமெடி ஹீரோவாகத்தான் நடித்துள்ளார். ஆனால், இந்த டக்கர் படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடிக்கிறாராம் அவர். அதனால் சண்டை காட்சியிலும் நடித்தபோதும் காமெடியையும் அவர் விடவில்லையாம். தனது பாடிலாங்குவேஜ்க்கு தன்னை முழு ஆக்சன் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காகவே காமெடியையும் கலந்து நடித்து வருகிறார் பிரேம்ஜி.



........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

........................................................................................................... 



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top