ஐ படத்தின் டீசர் வெளிவந்து கிட்டத்தட்ட 1 மாதம் காலம் ஆகிறது. அதில் சாதனை, இதில் சாதனை என அனைத்தையும் இந்த படத்தை பற்றி பேசி முடித்து விட்டோம்.இப்படம் கத்திக்கு போட்டியாக தீபாவளிக்கு வரும் என கூறினர். பின் சில பண நெருக்கடியால் படம் தள்ளிப்போனது.
இதை தொடர்ந்து தற்போது பொங்கலுக்கு என்னை அறிந்தால் படத்திற்கு போட்டியாக வரவிருக்கிறது.இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தால் உண்மையாகவே படத்தின் டப்பிங் வேலைகள் சில நாட்களுக்கு முன் தான் முடிந்ததாம். மேலும், விக்ரம் கூன் கதாபாத்திரத்திற்காக குரலை மாற்றி மூன்று மொழிகளில் பேசியுள்ளார்.ஏ.ஆர்.ரகுமானும் சமீபத்தில் தான் பின்னணி இசையை முடித்துள்ளார். இதனால் தான் லிங்கா இசை வெளியீட்டு விழாவிற்கு அவரால் வர முடியவில்லை என்று அவரே கூறியிருந்தார்.
கிங் ஆப் ஓப்பனிங் என்று கருதப்படும் அஜித்துடன் மோத ஐ படக்குழு ஏன் ரெடி ஆனது என்றால், எல்லாம் ஒரு வகை அட்ஜஸ்மெண்ட் தான் காரணமாம். ஒரே நாளில் படத்தை ரிலிஸ் செய்தால் ஐ என்ன தான் பிரம்மாண்ட படமாக இருந்தாலும் அஜித்தின் ரசிகர் பலம் தமிழ் நாட்டில் எல்லோரும் அறிந்ததே.
அதனால் ஐ ஜனவரி 14ம் தேதி ரிலிஸ் ஆகவுள்ளது.ஏனெனில் என்னை அறிந்தால் ஜனவரி 8ம் தேதி வருவதால் தங்கள் படத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்பதே ஆஸ்கரின் கணக்கு. எது, எப்படி இருந்தால் என்ன படம் நன்றாக இருந்தால் எந்தப்படமும் எப்போதும் ஓடும்.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.