↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சம்பள விஷயத்தில் நான் நெருக்கடி தருவதில்லை. ஆனால் சிலதயாரிப்பாளர்கள் பேசின சம்பளத்தைக் கூட தருவதில்லை என்றுநடிகை ஸ்ருதிஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நடிகையாகத்திகழ்கிறார் ஸ்ருதிஹாஸன். தமிழில் விஜய், தெலுங்கில்மகேஷ்பாபு என முதல் நிலை நாயகர்களுடன் ஜோடி சேர்ந்துவருகிறார்.

கையில் ஏகப்பட்ட படங்கள் இருப்பதால், புதிய படங்களில்ஒப்பந்தமாக அதிக சம்பளம் கேட்பதாக ஸ்ருதிஹாசன் மீது புகார்கூறப்பட்டது.

ஆனால் இதனை மறுத்துள்ளார் ஸ்ருதி. அவர் கூறுகையில், "சம்பள விஷயத்தில் நான் இதுவரை எந்தத் தயாரிப்பாளருக்கும்நிர்ப்பந்தம் கொடுத்ததில்லை. என் திறமை,உழைப்புக்கேற்பத்தான் நான் சம்பளம் பெறுகிறேன்.

இன்னும் சொல்லப்போனால் சில தயாரிப்பாளர்கள் எனக்குதருவதாக ஒப்புக் கொண்ட சம்பளத்தை கூட தராமல் பாக்கிவைத்துள்ளனர். மகேஷ்பாபு தெலுங்கில் சூப்பர் ஸ்டார் ஆகஇருக்கிறார்.

அவருடன் நடிப்பதற்கு நான் கேட்கும் சம்பளத்தை அந்தத்தயாரிப்பாளர் தர தயாராக இல்லை. எனவே நான் பின்வாங்கவேண்டியுள்ளது. இதனை மனதில் வைத்து எனக்கு எதிராக செய்தி பரப்புகிறார்கள்," என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top