↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இயக்குனர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த துணை நடிகை கைது செய்யப்பட்டார்.  மேற்கு தாம்பரம் பகுதியைசேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி (35). இவர் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் மனுஅளித்துள்ளார். அந்த மனுவில், தனது கணவர் ஹரிகிருஷ்ணன் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்துவருகிறார். இவர் வேளச்சேரி லட்சுமி நகர் பகுதியில் வசிக்கும் துணை நடிகை சங்கீதாவுடன் நெருக்கமாக இருந்துவருகிறார். இதனால் வீட்டிற்கு அவர் சரிவர வருவது கிடை யாது. சம்பளத்தை வீட்டிற்கு கொடுப்பது கிடையாது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.  புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் செந்தில்வடிவு,துணை நடிகை சங்கீதாவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும்தகவல்கள் வெளியாகியுள்ளது.


கடந்த 2007ம் ஆண்டு வடபழனியில் இயக்குனர் செல்வா கொலை வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்ததுணை நடிகை சங்கீதா, விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாக இருந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. கடந்த2011ம் ஆண்டு பீர்க்கன்காரணை பகுதியில் விபசார வழக்கில் கைதானபோது, அங்கு பணிபுரிந்து வந்த போலீஸ்காரர்ஹரிகிருஷ்ணனுடன் சங்கீதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றித்திரிந்து வந்துள்ளதாக தெரிகிறது. ஹரிகிருஷ்ணன், சங்கீதாவுக்கு வேளச்சேரி பகுதியில் தனி வீடு எடுத்துகொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  இதையடுத்து போலீசார் துணை நடிகை சங்கீதாவை வடபழனி காவல் நிலையத்தில்ஒப்படைத்தனர். இச்சம்பவம் போலீசாரின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top