↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


அஜித்தின் என்னை ‘அறிந்தால்’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி விடும் என்று சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைப் பார்த்த அஜித் ரசிகர்கள் ”இந்த பொங்கலும் எங்க பொங்கல் டா.. போன பொங்களுக்கு ஜுல்லாவ பொங்க வச்சோம்.!

இந்த பொங்களுக்கு ஐ-ய பொங்க வக்க போறோம்..! ரவிக்குமரர் ஆசப்பட்டா லிங்காவுக்கும் பொங்க வப்போம் டா...!

“என்ன நான் சொல்றது”  போன்ற டெரர் வாசகங்களுடன் பேனர்களை வைத்து அமர்க்களப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் அஜித் ரசிகர்கள்.

இந்த நேரத்தில் தான் கெளதம் மேனன் ஆபீஸிலிருந்து அதிர்ச்சி தரும் செய்தி கசிந்துள்ளது.

‘என்னை அறிந்தால்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது சந்தேகம் தான், பிப்ரவரிக்கு தள்ளிப் போனாலும் போகலாம் என்பது தான் அந்த அதிர்ச்சியான செய்தி. விசாரித்தால் இன்னும் ஷூட்டிங் மட்டுமே 20 நாட்கள் பாக்கி இருக்கு, அதுபோன அனுஷ்கா வேற கால்ஷூட் தராம தெலுங்கு பாகுபாலிக்கு போயிட்டார். அவரோட போர்ஷனும் பாக்கியிருக்கு. அதையெல்லாம் முடிச்ச பின்னாடி போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் கிட்டத்தட்ட 1 மாசம் போகும்.

இவ்வளவு வேலைகள் இருக்கும் போது எப்படி படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்கிறது கெளதம் மேனன் ஆபீஸ் வட்டாரம்.

........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

.......................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top