↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தமிழ் சினிமாவிற்கு மதுரை என்றாலே ஸ்பெஷல் தான் போல. மணி ரத்னம், பாலா போன்ற பல ஜாம்பவான்கள் மதுரையில் தோன்றியவர்கள் தான். அந்த வகையில் இம்மண்ணில் தோன்றிய மற்றொரு கலைஞன் தான் சிம்புதேவன்.

இவர் சிறு வயதிலேயே நன்றாக கார்டூன் வரையும் திறமை படைத்தவர். இதன் காரணமாகவே தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் கார்ட்டூனிஸ்டாக பணிபுரிந்தார். பின் கலைத்தாகத்தால் முழு நேர சினிமா கலைஞனாக உதவி இயக்குனராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.தமிழ் சினிமாவில் காமெடியில் புதுமை செய்தது இவராக தான் இருக்கும். 

பெரிய நடிகர்கள் படமே ஓடுவதற்கு இன்றைய கால கட்டத்தில் சிரமப்பட ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற படத்தை வைகைப்புயல் வடிவேலுவை வைத்து வெற்றி கொடுத்தார் சிம்புதேவன்.இப்படம் வெறும் சரித்திர படம் மட்டும் அல்ல, தமிழ் சினிமா சரித்திரத்தில் இடம்பெற்ற படம். இதை தொடர்ந்து பேண்டஸியை அடிப்படையாக கொண்டு அறை எண் 305ல் கடவுள், கௌ பாய் வாழ்க்கையை மையமாக கொண்ட இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் போன்ற தரமான படைப்புகளை தந்தார்.

இதுநாள் வரை இவர் பெரிய நடிகர்களுடன் இணைந்து பணிபுரிந்ததே இல்லை. ஆனால், அந்த ஜாக்பாட் இவருக்கு இளைய தளபதி மூலம் அடித்துள்ளது. ஆம், விஜய்யுடம் இவர் இணைந்து பிரம்மாண்ட படைப்பு ஒன்றை செதுக்கி வருகிறார். இப்படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் மைல் கல்லாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த கலைஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில் சினி உலகம் பெருமையடைகிறது.ஹேப்பி பெர்த்டே சிம்புதேவன்! 
............................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top