↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
‘ஹேக்கர்ஸ், ‘கேர்ள், இன்டருப்டட், ‘அலெக்ஸாண்டர், ‘மிஸ்டர் அன்ட் மிஸஸ் ஸ்மித்உட்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் ஏஞ்சலினா ஜோலி. 2011&ம் வருடம் ‘இன் த லேண்ட் ஆப் பிளட் அண்ட் ஹனி என்ற படத்தை தயாரித்து எழுதி இயக்கினார்.

இப்போது, ‘அன்புரோக்கன் என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். ‘பை த சீ என்ற படத்தை தயாரித்து எழுதி இயக்கி, நடித்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்றுள்ள ஜோலி, இப்போது நடிப்புக்கு முழுக்குப் போடுவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:நடிகையாக நான் மகிழ்ச்சிகரமாக இல்லை.

கேமராவுக்கு முன்னால் நிற்பதை நான் விரும்பியதில்லை. இருந்தாலும் நடித்தேன். படம் இயக்குவேன் என்றும் எப்போதும் நினைத்ததில்லை. ஆனால் இயக்கினேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இயக்குனராக தொடர்வதற்காக நடிப்பை விட்டுவிட முடிவு செய்துள்ளேன். ‘பை த சீ படத்தில் என் கணவர் பிராட் பிட்டுடன் நடித்துள்ளேன். வித்தியாசமான முயற்சி அது.
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top