↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அவார்டு படத்துக்கு சமந்தா ஆதரவாக புரமோஷன் செய்கிறார்.டாப் ஹீரோயின்கள் முதல் அறிமுக ஹீரோயின்கள் வரை தாங்கள் நடித்த படங்களின் ஆடியோ ரிலீஸ், பட புரமோஷன் நிகழ்ச்சி போன்றவற்றிற்கு வராமல் தவிர்த்துவந்தனர். ஒரு கட்டத்தில் இது தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து எழுந்த சர்ச்சையால், ‘ஹீரோயின்கள் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்‘ என்று தயாரிப்பாளர் சங்கம் கண்டிஷன்விதித்தது. அதன்பிறகு நடந்த நிகழ்ச்சிகளில் நடிகைகள் கலந்துகொள்ள தொடங்கினர். தயாரிப்பாளர்களின் வற்புறுத்தலால் தாங்கள் நடித்த படங்களை டுவிட்டரிலும் பேட்டிகளிலும் நடிகைகள் புரமோட் செய்கிறார்கள்.

இந்நிலையில் சமந்தா தான் நடிக்காத படத்துக்காக புரமோஷன் செய்துவருகிறார். பெண் கடத்தல் சம்பந்தமான ‘நா பங்காரு தல்லி‘ என்ற தெலுங்கு படத்தை பார்த்த சமந்தா வுக்கு அப்படம் பிடித்திருந்ததையடுத்து அதற்கு சப்போர்ட் செய்ய முடிவு செய்தார். இதுபற்றி அவர் கூறும்போது,‘இப்படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. கதை சொல்லப்பட்ட விதமும், யதார்த்தமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும் பாங்கும், அதில் நடித்தவர்களின் நடிப்பும் கவர்ந்தது. இப்படியொரு கலைப்படத்துக்கு எல்லோரும் ஆதரவு தரவேண்டும்‘ என்று அவர் குறிப்பிட்டார். 

........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

........................................................................................................... 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top