↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கமலஹாசன் தன்னைப் பகுத்தறிவு வாதியாகக் காட்டிக் கொண்டாலும் அவரது படைப்புகள் எல்லாம் தசாவதாரம், விஸ்வரூபம் என்று புராணப் பெயர்களையே சூடி நிற்கின்றன. அந்த வகையில்தான் பாபநாசம் படப்பெயரும் அமைந்துள்ளது!

நடிகர் கம­ல­ஹாசன் தன்னைப் பகுத்­த­றி­வு­வா­தி­யாகக் காட்­டிக்­கொண்­டாலும் அவ­ரது படைப்­புகள் எல்லாம் தசா­வ­தாரம், விஸ்­வ­ரூபம் என்று தெய்வப் பெயர்­க­ளையே சூடி நிற்­கின்­றன. அந்த வகை­யில்தான் பாப­நாசம் படமும்.
இந்தப் படத்தின் படப்­பி­டிப்­புக்­காக நெல்லை மாவட்டம் நாங்­கு­நேரி சென்ற கம­ல­ஹாசன் அப்­போது நாங்­கு­நேரி வான­மா­மலை மட ஜீயர் சுவா­மி­களை சந்­தித்­தி­ருக்­கிறார்!
மலை­யா­ளத்தில் மோகன்லால், மீனா நடித்து வெற்­றி­க­ர­மாக ஓடி­யது திரிஷ்யம் படம். இதைத் தமிழில் பாப­நாசம் என்ற பெயரில் ரீமேக் செய்­கி­றார்கள். மலை­யா­ளத்தில் படத்தை இயக்­கிய ஜீத்து ஜோசப்தான் தமிழிலும் இயக்கி வரு­கிறார்.  இந்தப் படத்தில் கம­ல­ஹா­ச­னுக்கு ஜோடி­யாக கெள­த­மியும் நடித்து வரு­கிறார். இந்தப் படத்தின் படப்­பி­டிப்பு நாங்­கு­நேரி, குற்­றாலம், மேலக்­கரை உள்­ளிட்ட இடங்­களில் நடந்து வரு­கி­றது.
இந்தப் படப்­பி­டிப்பு சம்­பந்­த­மாக நாங்­கு­நேரி ஸ்ரீவா­னு­மா­மலை பெருமாள் கோயி­லுக்கு வந்த கம­ல­ஹாசன், படப்­பி­டிப்பை முடித்­து­விட்டு கோயில் வளா­கத்தில் உள்ள ஜீயர் சுவா­மி­களின் மடத்­திற்கு சென்­றுள்ளார். அங்கு ஜீயர் சுவா­மி­களை சந்­தித்து உரை­யா­டி­யுள்ளார். ஜீயர் சுவா­மி­களின் முன்பு கம­ல­ஹாசன் நெற்றி நிறைய விபூ­தி­யுடன் அமர்ந்து பேசும் காட்­சிகள் வெளி­வ­ரவே பர­ப­ரப்புக் கிளம்பி விட்­டது.
நாங்­கு­நேரி ஸ்ரீவா­னு­மா­மலை பெருமாள் கோயிலில் என்ன நடந்­தது? என்­பது குறித்து அக்­கோ­யிலைச் சேர்ந்த, அந்த நிகழ்வில் கலந்து கொண்ட முக்­கியப் பிர­மு­கர்­க­ளிடம் கேட்ட போது;
நாங்­கு­நேரி கோயில் சார்ந்த பகு­தி­களில் இதற்கு முன்பும் சினிமா படப்­பி­டிப்­புக்கள் நடந்­துள்­ளன. அதைப்­போல கம­ல­ஹாசன் படம் சம்­பந்­த­மான ஒரு காட்சி எடுக்க வேண்டும் என்று தொடர்­பு­டைய சினிமா நிறுவனத்தினர் முறைப்­படி அனு­மதி கேட்­டனர். என்ன காட்சி என்ற விபரம் கேட்­கப்­பட்டு, முறைப்­படி அனு­மதி வழங்­கப்­பட்­டது.
பிற்­பகல் மூன்று மணி­ய­ளவில் கோயிலின் வெளியில் இருந்தே படப்­பி­டிப்பு துவங்­கி­யது. படத்தில் ஆன்­மீகம் சார்ந்த சந்­நி­யாசி ஒரு­வரை கமல் தேடி­வ­ரு­வது போலக் காட்சி எடுக்­கப்­பட்­டது. கமல் வரும் முன்பே அந்த சந்­நி­யாசி போய்­விட்­டது போல அந்த காட்சி அமைந்­தி­ருந்­தது. கம­ல­ஹாசன் நெற்­றியில் திரு­நீ­றுடன் வெளிப்­பி­ர­கா­ரத்தில் நடந்து செல்­வது போல காட்சி எடுக்­கப்­பட்­டது. வரும்­போது திரு­நீறு அணிந்­துதான் வந்தார். கிட்­டத்­தட்ட இரண்டு மணி­நேரம் படப்­பி­டிப்பு நடந்­தது.
படப்­பி­டிப்பு தளத்தில் கோயில் பற்­றியும் ஜீயர் சுவா­மிகள் பற்­றியும் கம­ல­ஹா­ச­னிடம் சிலர் எடுத்து கூறவும், ஜீயர் சுவா­மி­களை சந்­திக்க கமல் விரும்­பினார். இது­பற்றி ஜீய­ரிடம் கூறப்­பட்­டது.
அனு­மதி வழங்­கப்­ப­டவே, ஜீயர் சுவா­மி­களை கம­ல­ஹாசன் சந்­தித்தார். மரி­யாதை நிமித்­த­மான அந்தச் சந்­திப்பில் கம­லுக்கு சால்வை அணி­விக்­கப்­பட்­டது. ஜீயர் சுவா­மி­க­ளிடம் அவர் ஆன்­மிகம் குறித்து எதுவும் பேச­வில்லை.
ஜீயர் சுவா­மிகள், நல்ல கருத்­துள்ள படங்­களை எடுக்க வேண்டும் என்று கூற, கட்­டாயம் தான் முயற்­சிப்­ப­தாகக் கூறினார் கம­ல­ஹாசன். ஜீயர் சுவா­மி­களும், உங்­களின் இந்தப் படம் நன்கு அமை­யவும் நீங்கள் மென்மேலும் வள­ரவும் வாழ்த்­துக்கள் என்றார். மிகக்­கு­று­கிய நேரமே நடை­பெற்ற இந்தச் சந்­திப்­பினை முடித்­துக்­கொண்ட கம­ல­ஹாசன் நன்றி கூறி விடை பெற்றார். இதுதான் நடந்­தது.
கம­ல­ஹாசன், கோயிலின் மூல ஸ்தானத்­திற்கோ, கொடி­ம­ரத்­தினை தாண்­டிய உள்­ப­கு­தி­க­ளுக்கோ செல்­ல­வில்லை. சிலர், மேல்­சட்­டையைக் கழற்­றாமல் கம­ல­ஹாசன் கோயி­லுக்குள் சென்­று­விட்டார் என்று பர­ப­ரப்புக் கிளப்பி வரு­கின்­றனர்.
அது தவ­றா­னது. ஜீயர் சுவா­மி­களை சந்­திக்­கும்­போது சிலர் கம­ல­ஹா­ச­னிடம் மேல் சட்­டையை கழற்­ற­லாமே என்­ற­தற்கு கம­ல­ஹாசன் நாசூக்­காக மறுத்­து­விட்டார். எனவே, மேல்­சட்­டையை கழற்­றுங்கள் என்று யாரும் அவரைத் தொடர்ந்து வற்­பு­றுத்­தவும் இல்லை என்று முடித்­தார்கள்.
அதன்­பி­றகு கம­ல­ஹாசன் கோயிலின் வெளிப்­பு­றத்தில் உள்ள தேர், சப்­பரம், பல்­லக்கு போன்­ற­வற்றைப் பார்த்து அவற்­றையும் புகைப்­படம் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கமல், நாத்திகம் பேசி வந்தாலும் சமயம் தொடர்பான இலக்கியங்களில் ஆர்வமுடையவர். திவ்யபிரபந்தத்தில் ஈடுபாடு கொண்டவர். எனவே, ஜீயரோடு அதுபற்றி விரிவாகப் பேசியிருந்தாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் சிலர்.
எது எப்படியோ, கமலஹாசனின் பாபநாசம் படத்திற்கு வானுமாமலை ஜீயர் ஸ்பொன்சரில் ஒரு விளம்பரம் கிடைத்தாகி விட்டது!
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top