சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் கதையை உருவாக்குவதற்காக தனது உதவியாளர்களுடன் சுவிட்சர்லாந்து பறந்துள்ளார் இயக்குநர் ஹரி. ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த பூஜை படம் சமீபத்தில் வெளியானது.
இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ஹரி. இந்தப் படத்தின் கதை சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதிய படத்தின் கதையை உருவாக்குவதற்காக இயக்குநர் ஹரி, தனது உதவியாளர்கள் மூவருடன் நேற்று மாலை சுவிட்சர்லாந்துக்குக் கிளம்பினார். வழக்கமாக புதிய படத்துக்கு கதை விவாதிக்க, சென்னையில் தனி வீடு எடுத்து அலுவலகமாக மாற்றுவது வழக்கம். ஹரியோ தனது தற்காலிக அலுவலகத்தை சுவிட்சர்லாந்தில் போடுகிறார்.
.............................................................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.