↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
குணசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ருத்ரம்மாதேவியில் டைட்டில் கதாபாத்திரத்தில் - அதாவது ராணி ருத்ரம்மாதேவியாக அனுஷ்கா நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக அவர் நடித்த நாள்கள் 150.
அதில் அறுபது தினங்கள் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். பொதுவாக ஒரு நடிகை ஒரு படத்தில் முப்பதிலிருந்து நாற்பது நாள்கள் நடித்தாலே அதிகம். ஆனால் அனுஷ்கா அறுபது நாள்கள் ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் நடித்துள்ளார்.
ஒருமுறை கை மணிக்கட்டில் ஹேர்லைன் பிராக்சர் ஏற்பட்டது. அப்போதும் டூப் போடாமல் தோல் நிறத்தில் பேன்டேஜ் சுற்றி அனுஷ்காவே அந்தக் காட்சியில் நடித்தார்.
அதேபோல் ஒரு காட்சியில் 150 அடி உயரத்தில் தொங்க வேண்டும். இயக்குனர் பாடி டபுளை (டூப்) பயன்படுத்தலாம் என்ற போது அதனை மறுத்து அனுஷ்காவே அந்தக் காட்சியில் நடித்தார்.
ஹீரோக்களே டூப் வைத்துக் கொள்ளும் போது, அறுபது நாள்களில் ஒருமுறைக்கூட அனுஷ்கா டூப் வைத்துக் கொள்ளவில்லையாம். பாராட்ட வேண்டிய விஷயம்தான். அதேநேரம் அனுஷ்காவைப் போல் எல்லோரும் தனியாவர்த்தனம் செய்தால் நடிகர், நடிகைகளுக்கு டூப் போடும் தொழிலாளிகளின் கதி என்னாவது?
...........................................................................................................
எமது தளத்தின் மூலம் சினிமா, அரசியல் மற்றும் இதர செய்திகளை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு இந்த page ஐ like செய்யுங்கள் நண்பர்களே!!!

...........................................................................................................

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top