↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் எம்.எம்.கீரவாணி சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது என்னுடைய திரையுலக அனுபவத்தில் பல முட்டாள்களுடன் பணிபுரிந்துள்ளேன். இசையமைக்கும் வேலையை விட முட்டாள்களை சமாளிப்பது பெரும் சவால் என அவர் கூறியுள்ளார். யாரை மனதில் வைத்து இவ்வாறு கீரவாணி கூறினார் என்று தெலுங்கு திரையுலகம் பெரும் பரபரப்பில் இருக்கின்றது.

61 வயதான பிரபல இசையமைப்பாளர் கீரவாணி வரும் 2016ஆம் ஆண்டில் திரையுலகில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாஹுபாலி' உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து பிசியாக இருக்கின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது என்னுடைய இசையமைப்பில் பல முட்டாள்களை பாட வைத்திருப்பதாகவும்,  பல முட்டாள்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.முட்டாள்களுடன் பணிபுரிவது சவாலானது. நம்முடைய கருத்தை புரிந்து கொள்ளாமல் பிடிவாதமாக எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்று கூறியுள்ளார். சமீபத்தில் இவருக்கும் ராஜமெளலிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கிசுகிசு கிளம்பியது. ஒருவேளை அவரை மனதில் வைத்து சொல்லியிருப்பரோ? என டோலிவுட் திரையுலகம் பரபரப்பில் உள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top