↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித் நடித்து வரும் புதிய படத்திற்கு 'என்னை அறிந்தால்' என தலைப்பு அறிவிக்கப்பட்ட பின் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களும், திரைப்பட ஆர்வலர்களும் அடுத்த வேலையாக படத்தின் கதை இதுதான் என வழக்கம் போல 'கதை' விட ஆரம்பித்து விட்டார்கள். அதே போல படத்தில் இடம் பெறும் முக்கியமான வசனம் இது என அனுஷ்கா அஜித்திடம் பேசும் ஒரு காட்சியைப் பற்றியும் அடித்துத் தள்ளுகிறார்கள். 

ஒரு காட்சியில் அஜித்திடம் அனுஷ்கா பேசும் வசனம் இதுதானாம், “நான் உங்களைக் காதலிக்கிறேன், உங்களுக்கு இதுக்கு முன்னாடி கல்யாணம் ஆகியிருந்தாக் கூட எனக்குக் கவலை இல்லை. உங்க மேல நான் வச்சிருக்கிற காதல் என்னைக்குமே இப்படித்தான் இருக்கும்,” என்பதே அந்த வசனமாம்.படத்துல அஜித்துக்கு த்ரிஷா கூடத்தான் முதல்ல திருமணம் நடக்குமாம். அப்புறம் அவங்க இறந்து போயிடுவாங்களாம்.

 அஜித்தை ஒரு சந்தர்ப்பத்துல சந்திக்கிற அனுஷ்கா, அஜித்தை தீவிரமாக காதலிக்க ஆரம்பிச்சிடறாங்களாம். அப்பதான் அந்த வசனத்தை அனுஷ்கா பேசறாங்களாம். அஜித் படத்துல ஒரு போலீஸ் ஆபிசரா நடிக்கிறாரு என நேற்று முதலே பல கதைகள் எழுதப்பட்டு வருகின்றன. இப்படித்தான் “ஐ, லிங்கா” படத்திற்கும் பலர் கதை எழுத ஆரம்பித்தார்கள். இயக்குனர் ஷங்கர் கூட ஒரு பேட்டியில் இவ்வளவு பேர் கதை எழுதற திறமையோட இருக்கான்கறத பார்க்கும் போது மகிழ்ச்சியா இருக்கு என சமூக வலைத்தளங்களில் எழுதப்பட்டு வரும் 'கதை'களைப் பற்றி கலகலப்பாகச் சொல்லியிருந்தார். 

எத்தனை பேரின் கதை பலிக்கப் போகிறது என பார்ப்போம். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top