விஜய்யின் அடுத்த படமான சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு டைட்டில் வைத்துவிட்டார்களாம். கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் உருவாகப்போகும் இந்த படம் சரித்திர பின்னணியில் அமைந்த கதையாம்.
இப்படத்திற்கு முதலில் சிந்துபாத் மற்றும் மாரிசன் என்ற இரண்டு தலைப்பை யோசித்து வைத்திருந்தார்களாம் தற்போது மாரிசன் தலைப்பை வைத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம். விஜய்யுடன் இப்படத்தில் ஹன்சிகா மோத்வான் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தில் நான் ஈ வில்லன் சுதீப் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாரம் அதுமட்டுமில்லாமல் பழைய சரித்திர கதை என்பதால் யானை, புலி என மிருகங்களும் அதிகமாக தேவைப்படுகிறதாம்.
இப்படத்திற்கு சதுரவேட்டை நாயகன் நட்டி ஒளிப்பதிவு செய்கிறார். கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து விஜய்யும், நட்டியும் மீண்டும் இணையும் படம் இது, இதற்குமுன் யூத் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். மாரிசன் படத்தின் படப்பிடிப்பு தமிழ் நாடு, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் என காட்டுப் பகுதியில் எடுக்கப்போகிறார்களாம். இப்படத்தின் தயாரிப்பாளர் P.T.செல்வகுமார், இவர் விஜய்யின் மேனஜர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.