↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்தியாவில் விபச்சாரத்தையும், ஓரின சேர்க்கை திருமணத்தையும் சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கருத்து ஒன்றுக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளத்தில் குஷ்புவின் கருத்துக்கள் மிக வேகமாக மில்லியன் கணக்கான நபர்களை சென்றடைவதுண்டு. அதுவே சிலசமயம் சர்ச்சைகளையும் உண்டாக்கிவிடுகிறது. இதுபோன்ற சர்ச்சைகளில் அடிக்கடி இயக்குனர் ராம்கோபால் வர்மாதான் அடிக்கடி சிக்குவதுண்டு. இந்நிலையில் நேற்று குஷ்புவும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளார்.
நேற்று டுவிட்டர் இணையதளத்தில் ஒருவர், ‘இந்தியாவில் விபச்சாரத்தையும், ஓரின சேர்க்கை திருமணத்தையும் சட்டபூர்வமாக்க வேண்டும் என்றும்க், இந்தியா 1200 ஆண்டு காலம் பின்னோக்கி உள்ளது என்றும், இதிலிருந்து வெளியேறி நவீன உலகிற்கு திரும்ப வேண்டும்’ என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பதிவு செய்யப்பட்ட இந்த கருத்துக்கும், இதற்கு ஆதரவு தெரிவித்த குஷ்புவுக்கும் பாராடுக்களும், கடும் விமர்சனங்களும் மாறி மாறி டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இயற்கைக்கு மாறான உறவான ஓரின சேர்க்கை திருமணத்திற்கு குஷ்பு போன்ற பிரபலங்கள் ஆதரவு தரக்கூடாது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top