‘கத்தி’யை அடுத்து, சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். விஜய் படங்கள் அனைத்தையும் கேரளாவில் விநியோகம் செய்துவரும் தமீன் பிலிம்ஸ், விஜய்யின் ஊடகத் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர்களில் ஒருவரான தமீன் பிலிப்ஸ் இப்படம் குறித்து கூறியதாவது:-.
“நவம்பர் 10ஆம் தேதி முதல் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை ஈ.சி.ஆரில் பிரம்மாண்டமான அரண்மனை செட் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.. அதில் விஜய் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோருடன் சுமார் 300 நடனக் கலைஞர்கள் நடனமாட இருக்கிறார்கள். அந்தப் பாடல் படப்பிடிப்பு முடிந்தவுடன் சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
“பலரும் சொல்லி வருவதுபோல் இது முழுக்க ஃபேன்டஸி படம் கிடையாது. ஸ்ரீதேவி கதாபாத்திரம் மட்டும்தான் ஃபேன்டஸியாக இருக்கும். மற்றபடி இது ‘கில்லி’ பாணியில் முழுக்க ஒரு கமிர்ஷியல் ஆக்ஷன் படம்தான். ‘கில்லி’ பிரகாஷ்ராஜ் பாத்திரத்தைவிட சுதீப் கதாபாத்திரம் பேசப்படும்.
“விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோருடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட 7 காமெடியன்கள் நடிக்க இருக்கிறார்கள்.
“சண்டைப் பயற்சி இயக்குநர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் வெளிநாட்டினர்தான். படத்தில் 5 சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. லீ விட்டேகர் உள்ளிட்ட 3 பேர் வடிவமைக்க இருக்கிறார்கள்.
“விஜய்யின் தற்போதைய வியாபாரத்தை கணக்கில் கொண்டு, படத்தின் பட்ஜெட்டை தீர்மானித்து இருக்கிறோம்” என்றார் தமீன் பிலிப்ஸ்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.