↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்வேதா பாசு, தன் வாடிக்கையாளர்கள் பெயர்களை வெளியே சொல்லிவிடக்கூடும் என்ற அச்சத்தில் ஆந்திர தொழிலதிபர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஸ்வேதா பாசு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஹைதராபாத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்தபோது கையும் களவுமாக கைதானவர் சுவேதா பாசு. தேசிய விருது பெற்ற 23 வயது நடிகையான சுவேதா பாசு, தமிழில் கருணாசுக்கு ஜோடியாக சந்தாமாமா திரைப்படத்திலும் நடித்தவர். எனவே தேசிய அளவில் இந்த கைது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஸ்வேதா பாசுவை, ரிமாண்ட் ஹோமில் அடைத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் வெளியுலக தொடர்பு ஏதுமின்றி தொடர்ந்து ஹோமில் உள்ளார். இந்நிலையில், அவரது வாடிக்கையாளர்களான தொழிலதிபர்களுக்கு கிலி ஏற்பட்டுள்ளது. தங்களது தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் ஸ்வேதா பாசு தங்களது பெயரை போலீசாரிடமோ, ஊடகங்களிடமோ தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக பழைய வாடிக்கையாளர்கள் பலரும் பயத்தில் உள்ளனராம். 

விபச்சாரத்தில், ஸ்வேதா பாசு காஸ்ட்லியானவர் என்பதால் அவரிடம் பெரும் தொழிலதிபர்கள்தான் வாடிக்கையாளர்களாக இருந்தனர். அவர்களின் பண பலம், அரசியல் பலம் போன்றவை ஸ்வேதா பாசு உயிருக்கே ஆபத்தாக முடியும் என்ற அச்சம் சினிமாத்துறையிலுள்ளோருக்கு ஏற்பட்டுள்ளது. ஸ்வேதா பாசு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக மீடியாக்களுக்கு பேட்டியளித்த ஹைதராபாத் போலீசார், அவரது வாடிக்கையாளர்கள் பெயரை இதுவரை வெளியிடவில்லை. எத்தனை முறை மீடியாக்கள் கேட்டாலும் அதை சொல்வதில்லை. எனவே போலீஸ் துறையில் சிலர் நன்கு 'கவனிப்புக்கு' உள்ளாகியிருக்க கூடும் என்று ஆந்திர மீடியாக்கள் கூறுகின்றன. இந்த நிலையில் ஸ்வேதா பாசுவுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top