↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரபல குளிர்பான நிறுவனம் ஒன்று சமீபத்தில் அஜீத்தை அணுகி தங்கள் குளிர்பான விளம்பர படத்தில் நடிக்க வேண்டும் என்றும் அதற்காக பல கோடிகள் சம்பளமாக தர தயாராக இருப்பதாகவும் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் வெளிநாட்டு குளிர்பான நிறுவன விளம்பரத்தில் நடிக்க முடியாது என்று கூறி அஜீத் அந்த குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். ஐந்தே நாட்கள் படபிடிப்பில் கலந்துகொண்டிருந்தால் பல கோடிகள் கிடைக்கும் என்ற நிலையிலும் பணத்திற்காக தனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வாழும் அஜீத்தை கோலிவுட்டில் பெருமையாக பேசி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் நடிகர் விஜய், கோடிக்கணக்கில் குளிர்பான விளம்பர நிறுவனம் ஒன்றில் நடித்து பணம் சம்பாதித்துவிட்டு, அதே நிறுவனங்களுக்கு எதிராக சமீபத்தில் வெளிவந்த 'கத்தி' படத்தில் வீர வசனங்கள் பேசியதையும் கோலிவுட் வி.ஐ.பிக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுதான் அஜீத்-விஜய் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்றும், விஜய் படத்தில் மட்டுமே வீர வசனம் பேசுவார் என்றும் ஆனால் அஜீத் நடைமுறை வாழ்க்கையிலேயே தைரியமான முடிவு எடுப்பவர் என்றும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top