↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகனையும் தந்தையையும் ஒரே படத்தில் ரசிகர்கள் காணவிருக்கிறார்கள். சிபிராஜ், சத்யராஜ், பிந்துமாதவி, கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகிவரும் படம் “ ஜாக்ஸன்துரை”. பர்மா படத்தை இயக்கிய தரணிதரனே இப்படத்திற்கும் இயக்குநர்.
இப்படத்திற்கான கதையை உடைத்தார் இயக்குநர், “ சுதந்திரத்திற்கு முன்பு நடக்கிற கதை மற்றும் நிகழ்காலத்துக் கதை என்று இரண்டு கதைநகர்வுகள் இருக்கிறது. சத்தியராஜ் பேயாக நடிக்கிறார். சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நகரத்திலிருந்து கிராமத்திற்கு வேலைவிஷயமாக செல்கிறார் சிபிராஜ். அந்த நேரத்தில் நடக்கும் சுவாரஸ்யம் கலந்த அமானுஷிய நிகழ்வே படத்தின் கதை” 

இப்படத்தில் சாதாரண மனிதராகவும் பேயாகவும் இரட்டை கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். சிபிக்கு ஜோடியாக பிந்துமாதவி நடிக்கிறார். 25% படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.  இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் இடத்திலேயே செய்தியாளர் சந்திப்பு மாலை நடந்தது. அதில் சிபிராஜ் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். 

“நாய்கள் ஜாக்கிரதை படத்தைத் முடித்தவுடன் பேய் கதை மற்றும் அப்பாவுடன் இணைந்து நடித்தல் இந்த இரண்டையும் செய்யக்கூடாது என்பதில் முடிவாக இருந்தேன். ஆனால் இப்படத்தின் கதை என் முடிவையே முறியடித்துவிட்டது. பேய் படத்துலயே இது கொஞ்சம் வித்தியாசமானதா இருக்கும்” 

சத்தியராஜ் பகுத்தறிவுவாதி இருப்பினும் பேயாக நடிக்க எப்படி சம்மதித்தார் என்று கேட்டதற்கு, “ இப்படத்தில் கதை மற்றும் அதில் இருக்கும் சமுக கருத்துக்காகவே நடிக்க சம்மதித்தார்” என்று முடித்தார் சிபிராஜ். 

நிகழ்ச்சியின் போது, படப்பிடிப்பு தளத்தில் சத்தியராஜ் பேய் வேடத்தில் இருந்ததால் செய்தியாளர்களை சந்திக்கமுடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டான பேய்பட வரிசையில் அடுத்தும் ஒரு பேய் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top