↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில், திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், தமிழரசுவின் மகனுமான நடிகர் அருள்நிதியின் திருமணம், நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் வேலை செய்வதற்காக ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு வந்த இரு நபர்கள், சுப்புராயன் என்பவரது பணப்பையை திருடிக் கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்த சுப்புராயனும், பிற தொழிலாளர்களும் சேர்ந்து இரு நபர்களையும் விரட்டிப் பிடித்துள்ளனர்.

பின்னர் அந்த இரு நபர்களும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில் அவர்கள், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சாதிக்பாட்ஷா, மின்ட் தங்கச் சாலையைச் சேர்ந்த பாஸ்கர் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது போலிஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top