↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஜூலை 15ம் தேதி தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் மீண்டும் சரத்குமார் போட்டியிட தலைவர் பதவியில் போட்டியிட இருக்கிறார். இவரது அணி சார்பில் பொதுச்செயலாளராக உள்ள ராதாரவி, துணைத் தலைவர் கே.என்.காளை போன்றோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் புதிதாக விஷால், நாசர் அணியினரும் தேர்தலில் நிற்க தயாராகி வருகிறார்கள்.இந்நிலையில் நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டும் பணி நடந்துவருகிறது. எனினும் தேர்தல் நடக்கவிருப்பதாக அறிவித்துள்ள ஜூலை 15ம் தேதியான புதன் கிழமை என்பது வேலை நாள்.
எப்போதும் தேர்தல் இரண்டாம் ஞாயிறான விடுமுறை தினத்தில் தான் நடக்கும் அதே போல் இந்த முறையும் மாற்ற வேண்டும். இல்லையேல் வெளியூரில் படப்பிடிப்புகளில் இருப்போரால் தேர்தலில் கலந்துகொள்ள இயலாது. அதே போல் தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் எனவும் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து வழக்கு தொடுத்துள்ளார் விஷால்.
முக்கியமாக நாடக நடிகர்கள் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும் அதனால் தேர்தல் தினத்தை மாற்ற வேண்டும் என வழக்கில் கோரப்பட்டுள்ளது.   எனவே நீதிபதி விசாரணைக்கு பிறகு தேர்தல் தேதி மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top