கண்ணா லட்டு தின்ன ஆசையா` உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகியான நடிகை விஷாகா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாசமாகப் பதிவிட்ட ஒருவருக்கு காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.அவரின் துணிச்சலைப் பாராட்டியுள்ள நடிகை த்ரிஷா விஷகாவிற்கு ஆதரவை அளித்துள்ளார்.
நடிகை விஷாகா சிங் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில், வெள்ளை நிற டிஷர்ட் அணிந்த படம் ஒன்றை வெளியிட்டார். அதில் (Everybody is somebody’s foreigner) என்கிற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு நபர் மிக மோசமான முறையில் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில்,ஆபாசமான கருத்தை பதிவிட்டிருந்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை விஷாகா சிங் ஆபாசமாக கமெண்ட் செய்த நபருக்கு மிகக் காட்டமாக பதிலடிக் கொடுத்திருந்தார்.
" நான் பெண் என்று எனக்குத் தெரியும். பொது அறிவு இருக்கா. உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, அத்தை , தோழிகளுக்கு இருப்பது போலத்தான் எனக்கும் உள்ளது. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருப்பதுதான். உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, அத்தை, தோழிகளுக்கும் இது பொருந்தும். அவர்களிடம் போய் இப்படி அசிங்கமாக கமெண்ட் அடிக்க முடியுமா? உனக்காக நான் வருத்தப்படுகிறேன். தைரியம் இருந்தால் என் முன்னால் வந்து சொல். இல்லையென்றால் என்னுடைய பக்கத்தை விட்டு வெளியே செல்" என்று பதிவிட்டார்.
பிறகு அந்தப் புகைப்படத்தையும் அதனால் உருவான கமெண்ட்டுகளையும் விஷாகா நீக்கிவிட்டார். தேவையில்லாத விமர்சனங்கள் உருவாகும் என்பதால் அந்த பதிவை நீக்கிவிட்டேன் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
விஷாகாவின் விளாசல் பதிலைப் பாராட்டியுள்ள நடிகை த்ரிஷா "இத்தகைய கோழைகளை எதிர்கொண்ட விதம் அற்புதம். பெண்களின் சக்தியையே இது காட்டுகிறது" என்றுன் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.