பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். |
டெல்லியில் நேற்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு நடந்துள்ளது. அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் கலந்துகொண்டு பேசியுள்ளனர். மாநாட்டை துவக்கி வைத்து பேசிய சோனியாகாந்தி, நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மூலம் தகவல் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தும் திறனை காங்கிரஸ் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொண்டோம். நாங்கள் பெரிய சாதனைகள் எல்லாம் செய்திருக்கிறோம். ஆனால் மக்களிடத்தில் அது சென்று சேரவில்லை. கட்சி அமைப்பு இதுபோன்ற பரப்புரைகளில் முக்கிய கருவியாக செயல்படவேண்டும் என்றும் மாநில முதல்வர்கள் கட்சி அமைப்பையும், நிர்வாகத்தையும் ஒருங்கிணைத்து வேலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மன்மோகன்சிங் பேசுகையில், பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தகவல் தொடர்பு, மற்றும் சந்தைப்படுத்துதலை சரியாக பயன்படுத்தவில்லை. காங்கிரஸ் அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் முறையாக மக்களிடம் சென்றடையாததே எங்கள் தோல்விக்கு காரணம். என்று தெரிவித்துள்ளார். |
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.