↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித், சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு பெரம்பூர் பின்னிமில்லில் நடந்து முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கும் என்று சொன்னார்கள்.

ஆனால் இரண்டாவதாகப் பத்துநாட்கள் நடக்கவிருக்கும் படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெறுகிறதாம். இதற்காக சென்னை திரைப்படநகரில் ஒரு பெரியசெட் போடப்பட்டிருக்கிறதாம். இந்த செட்டில் ஜூன் 8ம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்ததாம்.

படப்பிடிப்புக்குழுவினர் எல்லோரும் படப்பிடிப்புத்தளத்துக்கு வந்துவிட்டாலும் படப்பிடிப்பைத் தொடங்கமுடியவில்லையாம். காரணம், செட் வேலை முடியாமல் போய்க்கொண்டேயிருந்தது தான் என்கிறார்கள்.

அதனால் கடுப்பான சிவா, இன்று படப்பிடிப்பே வேண்டாம் நாளையிலிருந்து தொடங்கிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம். இதனால் படப்பிடிப்புக்கு வந்த தொழிலாளர்கள் எல்லோரும் திரும்பிச்சென்றுவிட்டனர்.

எல்லோரும் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துவிட்டதால் அவர்களுக்கான தினக்கூலி மற்றும் பேட்டாவைக் கொடுத்தாக வேண்டுமாம். இதனால் ஒருநாள் செலவு செய்தும் படப்பிடிப்பு நடத்தமுடியவில்லை என்றாலும், இந்த இழப்பை இயக்குநர் சரிசெய்துவிடுவார் என்று சொல்லுகிறார்கள்.

எப்படி என்றால் பத்துநாட்களில் எடுக்கத் திட்டமிட்ட காட்சிகளை ஒன்பதுநாட்களிலேயே அவர் முடித்துவிடுவாராம். அந்த அளவுக்கு வேகமாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் என்று படக்குழுவில் உள்ளவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top