↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சத்யராஜ், சரத்குமார் வரிசையில் மற்றொரு வில்லன் நடிகர் கோலிவுட்டில் ஹீரோவாக மாறியுள்ளார். அவர்தான் நடிகர் கிஷோர். பொல்லாதவன் படத்தில் மிரட்டலான 
வில்லனாகவும், ஆரம்பம் படத்தில் கண்டிப்பாக போலீஸ் ஆபீசராகவும், ஹரிதாஸ் படத்தில் ஒரு பாசமிகு தந்தையாகவும் நடித்த கிஷோர், முதன்முதலாக ஒரு ஹீரோவாக நடிக்கின்றார். ஏற்கனவே சந்தனக்கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை கதையான 'வனயுத்தம்' படத்தில் இவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும் இந்த படம்தான் அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் 'காதலி காணவில்லை' மற்றும் 'பிஷ்மர்' என்ற தலைப்புகளில் தயாராகி வரும் இந்த படத்தில் கிஷோர், ஒரு அனாதை இளைஞன் படிப்படியாக எப்படி கேங்ஸ்டராக மாறுகிறார் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். 'ஆள்' படத்தில்  விதார்த் ஜோடியாக நடித்த ஹர்திகா, இந்த படத்தில் கிஷோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

இந்த படத்தின் இயக்குனர் ரவிதேஜா, இந்த படத்தின் ஹீரோ கேரக்டர் குறித்து கூறியபோது, 'இந்த படம் கேங்ஸ்டர் ஒருவர் செய்யும் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், அவனுக்குள்ளும் ஈரமான இதயம் ஓன்று இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பதாக கூறியுள்ளார்.  ஏற்கனவே ரஜினிகாந்த், கார்த்திக் ஆகியோர் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது கிஷோரும் கேங்க்ஸ்டராக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top