↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரேசில் நாட்டை சேர்ந்த டாரியல் டிக்சன் மெனன்ஸ் சேவியர் ஜூஜித்சு தற்காப்புகலையின் பயிற்சியாளராக பணியாற்றிவந்தார்.

இந்நிலையில் இவர் தனது 12 வயது மகனை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறி போலிசில் சரணடைந்தார்.

இதை தொடர்ந்து சேவியரை விசாரணைக்காக 30 நாள் காவலில் தகுவடிங்கா சிறைச்சாலையில் அடைத்தனர்.

சேவியர் செய்த குற்றம் குறித்து சிறைச்சாலையில் இருந்த மற்ற கைதிகளுக்கு செய்தி பரவியது. சேவியருக்கு பாடம் கற்று கொடுக்க வேண்டுமென சக சிறைக்கைதிகள் தீர்மானித்தனர்.

இதையடுத்து 20 கைதிகள் கொண்ட கும்பல் ஒன்று சேவியரை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரது மர்ம உறுப்பு உள்பட பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் சிறைச்சாலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல தையல்கள் போடப்பட்டனென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேவியர் சிகிச்சைக்கு பின் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பினார். மீண்டும் அதே கும்பல் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் தன்னை சுற்றி 2 கும்பல் சுற்றி வந்து இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top