↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பல அமெரிக்க அரசியல் தலைவர்களை விட பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக்கில் அதிக அமெரிக்க ஃபேன்ஸ் உள்ளனர். ஃபேஸ்புக்கில் அதிக அளவில் வெளிநாட்டு ஃபேன்ஸ் உள்ள தலைவர்களில் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஃபேஸ்புக், ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளார். தனது நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது தெரிவித்து வருகிறார். இந்நிலையில் செக் குடியரசைச் சேர்ந்த சோஷியல்பேகர்ஸ் என்ற நிறுவனம் அளித்த தகவலின்படி தி நியூயார்க் டைம்ஸ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு,
புதன்கிழமை வரை மோடிக்கு ஃபேஸ்புக்கில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 529 ஃபேன்ஸ் உள்ளனர். பெரும்பாலான அமெரிக்க அரசியல் தலைவர்களை விட மோடிக்கு ஃபேஸ்புக்கில் அதிகமான அமெரிக்க ஃபேன்ஸ் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தியதால் அவருக்கு ஃபேஸ்புக்கில் ஏராளமான ஃபேன்கள் கிடைக்க காரணம்.
நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயர் கார்டனில் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பல அமெரிக்க தலைவர்களும் கலந்து கொண்டனர். மேடிசன் ஸ்கொயர் கார்டனில் மோடியுடன் புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்ட அமெரிக்க தலைவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
என்ன தான் மோடிக்கு ஃபேஸ்புக்கில் அதிக அமெரிக்க ஃபேன்ஸ் இருந்தாலும் ஏராளமான இந்தியர்கள் தான் அவரது ஃபேஸ்புக் ஃபேன்ஸாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஃபேஸ்புக் ஃபேன்களில் 1 கோடியே 50 லட்சம் பேர் அமரிக்கர்கள், மீதமுள்ள 3 கோடியே 70 லட்சம் பேர் அமெரிக்கா அல்லாத நாட்டவர்கள். ஃபேஸ்புக்கில் அதிக வெளிநாட்டு ஃபேன்கள் வைத்திருக்கும் தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஒபாமா தான்.
Recent Posts
கருணாநிதி இல்லத் திருமண விழாவில் கொள்ளையடித்த பலே திருடர்கள்
கடந்த திங்கள்கிழமை (08.06.2015) அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத[...]
என் கடைசி மூச்சு வரை காதலனுடன் சேர்ந்து வாழ போராடுவேன்: தற்கொலைக்கு முயன்ற காதலி
சேலம் மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், கடைசி மூச்சு இருக்கும் வரை காதலனுடன் சேர்ந்து வா[...]
பிரதமர் மோடி என்னை விட திறமையான விற்பனையாளர்: மன்மோகன்சிங் அதிரடி
பிரதமர் மோடி தன்னை விட திறமையான விற்பனையாளர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்து[...]
அப்பீலுக்கு மேலே அப்பீல்: ஜெயாவை பிடித்து உள்ளே போட முயற்சி.... பலிக்குமா முயற்சி?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதல[...]
முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா எப்போது?
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் இன்னமும் முதல்வர் ஓ.பன[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.