பமுனுகம - சேதவத்த பள்ளிக்கு அருகில் நீர்கொழும்பு களப்பு பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று (02) மாலை 6 மணியளவில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து ஒரு சடலம் மீட்கப்பட்டது. எலகந்த - ப்ரீதிபுர வீதியில் வசிக்கும் 41 வயதுடைய நபர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று (03) அதிகாலை 2 மணியளவில் குறித்த களப்பு பகுதியில் இருந்து மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தெஹிவளை - மல்வத்த வீதியில் வசிக்கும் 36 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாவத்த பிரதேசத்தில் உள்ள போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் மத்திய நிலையத்தில் இருந்து காணாமல் போன இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மரண விசாரணைக்கென சடலங்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.