↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் "கத்தி" படத்தின் தயாரிப்பாளர் கொழும்பு கட்டநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.கத்தி படம் வெற்றிபெற்றதனை(??????) அடுத்து, லைக்கா படத்தயாரிப்பு குழுவினர் இந்தியா சென்று பின்னர், அதனைக் கொண்டாட மாலைதீவுகள் சென்று தங்கியுள்ளார்கள். 

பின்னர் மாலை தீவில் இருந்து இன்று காலை(29) லண்டன் திரும்ப திட்டமிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அவர்களது விமானம் கொழும்பு கட்டநாயக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்துள்ளது.இந்நிலையில் சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்களின் பாஸ்போர்ட் படத்தை, கையில் எடுத்துக்கொண்டு விமானத்தினுள் வந்த 10 பேர் அடங்கிய குழு ஒன்று, பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்திருந்த சுபாஷ்கரன் மற்றும் பிரேமிடம் விசாரணை நடத்தவேண்டும் எனவும், அவரை விமானத்தை விட்டு கிழே இறங்கி வருமாறும் கூறி அழைத்துச் சென்றுள்ளார்கள்.

தம்மை புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளம் காட்டிய நபர்களே இவ்விருவரையும் விமானத்தில் இருந்து இறங்கி உள்ளே கொண்டு சென்றுள்ளார்கள். 30க்கும் மேற்பட்ட கத்தி திரைப்பட குழுவினர் அந்த விமானத்தில் இருந்துள்ளார்கள். அவர்கள் எவ்வளவோ தடுக்க முற்பட்டும் அவர்களால் எதனையும் செய்யமுடியவில்லை.இந்நிலையில் சுபாஷ்கரன் கைதுசெய்யப்பட்டது ஏன் என்று தெரியாத நிலையில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் பயணம் செய்யவிருந்த விமானம் லண்டன் நோக்கி புறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top