இஸ்லாமிய மதகுரு ஒருவர் தன்னைத் தானே மரத்தில் கட்டிவைத்துக்கொண்ட சம்பவம் ஒன்று நேற்று திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.
குச்சவெளி, ஜாயா நகர் அல்மஸ்ஜிதுர் ரஹ்மானியாவின் மதகுரு அப்துல் சலாம் அப்துல் ரஹ்மான் என்பவரே இவ்வாறு மரமொன்றில் தன்னைக் கட்டிவைத்துக் கொண்டுள்ளார். இதற்காக அவர் பாடசாலை மாணவன் ஒருவரின் உதவியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தனக்கு எதிரான வழக்கு விசாரணைகளிலிருந்து தப்புவதற்காகவே அவர் இவ்வாறு செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த மதகுரு காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் அவர் பாடசாலை மாணவன் ஒருவருடன் கையில் கயிறு ஒன்றையும் எடுத்துக் கொண்டு காட்டுப்பக்கமாக சென்றதை புலனாய்வாளர் ஒருவர் தற்செயலாக கண்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த பாடசாலை மாணவனிடம் மேற்கொண்ட விசாரணகளின்போது மதகுரு கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்தை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது குறித்த மதகுரு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தனக்கு எதிரான வழக்கு விசாரணைகளிலிருந்து தப்புவதற்காகவே அவர் இவ்வாறு செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த மதகுரு காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் அவர் பாடசாலை மாணவன் ஒருவருடன் கையில் கயிறு ஒன்றையும் எடுத்துக் கொண்டு காட்டுப்பக்கமாக சென்றதை புலனாய்வாளர் ஒருவர் தற்செயலாக கண்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த பாடசாலை மாணவனிடம் மேற்கொண்ட விசாரணகளின்போது மதகுரு கட்டிவைக்கப்பட்டிருந்த இடத்தை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது குறித்த மதகுரு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.