↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல், உள்ளைத்தை அள்ளித்தா போன்ற பல படங்களின் மூலம் நம் மனதை கவர்ந்தவர் கார்த்திக். இவர் சில நாட்கள் முன் தன் அண்ணன், தாயாரை ஏமாற்றி சொத்தை பறித்துக் கொண்டார் என்று போலிஸில் புகார் தந்தார்.

தற்போது இது அப்படியே தலைகீழ் ஆகியுள்ளது. கார்த்திக் அவர்களின் தாயார் சமீபத்தில் அளித்த அறிக்கையில் பல அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். இதில் ‘எனது இளைய மகன் கார்த்திக் கொடுத்த புகார் மனு தவறானது. எனது பெயரில் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி ரோட்டில் சொத்துக்கள் இருந்தன. 

அந்த சொத்துக்களை நான்தான் எனது மூத்தமகன் கணேசன் பெயருக்கு எழுதி கொடுத்தேன்.என்னை ஏமாற்றி அந்த சொத்துக்களை எனது மூத்த மகன் எழுதி வாங்கிக் கொண்டதாக கார்த்திக் கூறிய புகாரில் உண்மை இல்லை. அந்த சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கார்த்திக்கும், அவரது அடியாட்களும் என்னையும், எனது மூத்த மகன் கணேசனையும் மிரட்டுகிறார்கள்.

எனவே எனக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, கார்த்திக் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top