↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

‘அஞ்சான்’ படத்தின் புரமோஷனுக்கான சந்திப்பில் திடீரென்று மீடியாவிடம் பேசிய சமந்தா, அப்போது சொன்ன கருத்துகள் எல்லாம் வெவ்வேறு வடிவில் பிரசுரமாகி வம்பு வளர்ந்ததால், இப்போது ‘கத்தி’ பட புரமோஷனில் பங்கேற்க மாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம். மேலும், தன் மனதுக்குப் பிடித்த ஹீரோ சித்தார்த் பற்றியே அனைவரும் கேள்வி கேட்பதால் டென்ஷனான அவர், சித்தார்த் நடித்துள்ள ‘எனக்குள் ஒருவன்’ ஆடியோ விழாவில் பங்கேற்றதற்கான காரணத்தை சொல்லவும் தயங்குகிறாராம்.

தெலுங்கில் அவர் பிஸியாக இருந்தாலும், தமிழில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார். தற்போது விக்ரம் ஜோடியாக ‘10 எண்றதுக்குள்ள...’ படத்தில் நடிக்கும் சமந்தா, சென்னையில் சித்தார்த் வீட்டில் தங்குகிறாராம். இதுகுறித்து சித்தார்த் கூட மீடியாவிடம் பேசத் தயங்குகிறார்.

‘சிம்பு ஒன்றும் கெட்டவர் இல்லை. எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டோம். இனி அவருடைய விஷயத்தில் நானும், என்னுடைய விஷயத்தில் அவரும் தலையிட மாட்டோம். இது ஜென்டில்மேன் அக்ரிமென்ட்’ என்று, சிம்புவைப் பிரிந்த பிறகு முதல்முறையாக அவரைப் பற்றி கருத்து சொல்லியிருக்கிறார் ஹன்சிகா.

 இதுகுறித்து சிம்பு வாய் திறக்கவில்லை என்றாலும், நெருங்கிய நண்பர்களிடம், ‘நானும், ஹன்சிகாவும் ஒருத்தரை தாக்கி ஒருத்தர் பேட்டி கொடுக்க மாட்டோம். ஏதோ கெட்ட காலம், ரெண்டுபேரும் பிரிய வேண்டியதாயிடுச்சி. வேற விஷயம் பேசுவோம்’ என்று சொல்லி வருகிறார். அவரும், ஹன்சிகாவும் ‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களில் இணைந்துள்ளனர். இப்படங்களின் ஷூட்டிங் எப்போது முடியும் என்றே சொல்ல முடியவில்லை.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top