‘காதலுக்கு கண்ணில்லை’ படத்தின் பெண் தயாரிப்பாளர் Y. இந்து அவர்கள் அப்படத்தின் தியேட்டர் ரிலீசுக்கு தியேட்டர் ‘புக்’ செய்யும் மீடியேட்டராக சிவா என்பவரை வேலைக்கு சேர்த்தார்.
திடீரென்று கடந்த சில நாட்களாக நடு இரவில் இந்து அவர்களுக்கு சிவா போன் செய்து ‘செக்ஸ்’ டாச்சர் கொடுத்திருக்கிறார்.
பொறுத்துப்பார்த்த இந்து அவர்கள் நேரில் அழைத்து சிவாவை கண்டித்து இருக்கிறார், அப்பொழுது திடீரென்று காரில் அமர்ந்திருந்த இந்து அவர்களை கட்டிப்பிடித்து முத்தமிட முயற்சித்திருக்கிறார் .இதனால் மேலும் கோபம் அடைந்த இந்து அவர்கள் செருப்பால் அடித்து சிவாவை விரட்டியிருக்கிறார்.
தன்னை பாதுகாத்துக்கொள்ள நீலாங்கரை காவல் நிலையத்தில் சிவா மீது புகார் (FIR) பதிவு செய்திருக்கிறார். இதையறிந்த சிவா தமிழகம் முழுவதம் ரிலீசாக வேண்டிய இந்தப் படத்திற்கு ‘புக்’ செய்யப்பட்ட தியேட்டர்களுக்கு ஃபோன் செய்து படத்தை இன்று 31-10-2014 ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்து தலைமறைவாகி விட்டார்.
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மீடியேட்டர் சங்கத்திலும் சிவா மீது தயாரிப்பாளர் இந்து புகார் செய்திருக்கிறார். காவல்துறை கைது நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற புல்லுருவிகளை திரையுலகம் இனம் கண்டு தண்டிக்க வேண்டும்!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.