தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு சிங்கள அரசு தூக்கு தண்டனை விதித்திருப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் சிலரை சிங்கள கடற்படை கைது செய்தது. இவர்களில் 5 பேருக்கு கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அவர்கள் மீது பொய் வழக்குகளைச் சுமத்தி இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தூக்கு தண்டனை குறித்து நடிகர் கமல்ஹாசனிடம் தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டார். “இதைவிடக் கேவலம், மனித உரிமை மீறல் எதுவும் இருக்காது” என்ற கமல்ஹாசன், “இலங்கையின் இந்த நடவடிக்கை மனிதாபிமானத்துக்கும் மனித குலத்துக்கும் விடுக்கப்பட்ட சவால்” என்றார்.
“இந்திய அரசு உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்தி 5 உயிர்களையும் காக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். “இல்லை என்றால், இங்கு அரசு என்ற ஒன்று இருப்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்” என்றார் கமல்ஹாசன்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.