சீனாவில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் திருட முயன்ற இளம்பெண் ஒருவரை அந்த கடையின் முதலாளி அரைநிர்வாணமாக்கி வித்தியாசமான தண்டனை கொடுத்துள்ளார்.
கிழக்கு சீனாவில் உள்ள Zhejiang province என்ற பகுதியில் உள்ள Wenzhou நகரில் 39 வயதான Mei Hsueh, என்பவர் ஒரு ஜவுளிக்கடை வைத்துள்ளார்.
இவரது கடையில் ஜவுளி வாங்க வந்த ஒரு இளம்பெண் கடைக்காரரை ஏமாற்றி ஒருசில துணிகளை திருடியதை கடை முதலாளி சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்தார்.
உடனடியாக அந்த திருட்டு பெண்ணை பிடித்து கடைக்கு வெளியே இழுத்து வந்து வலுக்கட்டாயமாக அந்த இளம்பெண்ணை மேலாடைகளை கழட்டினார். பிராவையும் விட்டுவைக்கவில்லை.
இதனால் அவமானத்தில் கூனிக்குறுகி போன அந்த இளம்பெண், கடை முதலாளியின் காலில் விழுந்து கதறி அழுது தன்னுடைய பிராவை மட்டுமாவது கொடுக்குமாறு கதறினார்.
ஆனால் கடை முதலாளி கொஞ்சம் கூட இரக்கப்படாமல் போலீஸார் வரும் வரை அந்த இளம்பெண்ணை அரைநிர்வாணமாக வைத்திருந்தார். இந்த கொடூர காட்சியை அந்த பகுதியில் இருந்த பலர் பார்த்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
போலீஸார் வந்து திருட்டு பெண்ணை கைது செய்தனர். ஆனால் கடை முதலாளி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து சீன பெண்கள் அமைப்பு கடை முதலாளி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.