
ஹரியானாவில் பூங்கா ஒன்றில் நிர்வாணமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண், பெண் உடல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் சோனிபட் என்ற பூங்காவில் இரண்டு காதல் ஜோடியின் உடல்கள் நிர்வாண நிலையில் இருந்தது கண்டு நடைபயிற்சிக்காக வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் காதல் ஜோடியின் உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக சோனிபட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூங்காவில் இருந்த காதல் ஜோடிகள் கௌரவக் கொலை செய்யபட்டார்களா அல்லது மர்ம நபர்கள் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்களா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரியனாவில் பொதுவாக உயர்சாதி பெண்களை ஆண்கள் காதல் செய்தவதால் கௌரவக் கொலை போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment