↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இலங்கை அணியின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரியாவின் ராஜினாமா முடிவு சரியானதே என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் முடிந்த உலகக்கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த இலங்கை அணி, உலகக்கிண்ணம் வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், காலிறுதியில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது.
இது இலங்கை அணி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இவ்வாறு ரசிகர்களின் ஏமாற்றத்திற்கும், இலங்கை அணியின் தோல்விக்கும் அணித்தெரிவே காரணம் என பலராலும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் குழு நிலைப் போட்டிகளில் களமிறக்கப்படாத குசல பெரேராவை முக்கிய போட்டியான காலிறுதிப் போட்டியில் களமிறக்கியதும் இலங்கை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் உலகக்கிண்ண தொடரில் அணியின் தெரிவில் சனத் ஜெயசூரியவின் தீர்மானம் தவறாக அமைந்துள்ளதாக கருதப்படுகின்றது.
எனவே தெரிவுக்குழுத்தலைவர் பதவியிலிருந்து விலகும் ஜெயசூரியாவின் தற்போதைய முடிவு சரியானதே என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top