ஒரு பெரிய படம் வருகிறது என்றால், அதனுடன் கூடவே பிரச்சனைகளும் வந்து விடும் போல. சமீபத்தில் கொம்பன் மிகுந்த சிரமத்தை கடந்து தான் திரையரங்கிற்கு வந்தது.
அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 17ம் தேதி ஓ காதல் கண்மணி படம் திரைக்கு வரவிருந்தது. ஆனால், மணிரத்னத்தின் முந்தைய படமான கடல் படுதோல்வியடைந்தது.
இதை காரணம் காட்டி அந்த படத்தில் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள், அந்த நஷ்டத்தை ஈடுகட்டினால் தான், இந்த படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று கூறியுள்ளனர்.
இதற்காக நாளை (ஏப்ரல் 6) அல்லது நாளை மறுநாள் (ஏப்ரல் 7) ஆகிய தேதிகளில் அவர்கள் புகார் அளிக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்தன.
இதனால், திட்டமிட்டப்படி ஏப்ரல் 17-ம் தேதி 'ஒ காதல் கண்மணி' வெளியாகுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.