பெங்களூரில் நடிகை பூஜா காந்தி விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாகியுள்ளார். |
தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் நடிகை பூஜா காந்தி நேற்று முன்தினம் தனது குடும்பத்தாருடன் பெங்களுர் ஜெயநகர் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீர் என்று பூஜாகாந்தி ஓட்டி வந்த கார் எதிரே வந்த இரண்டு சக்கரம் வாகனம் மீது மோதியது இதில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்த வர்ஷா என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்து விட்டு நடிகை பூஜா காந்தி தலைமறைவாகிவிட்டார். பாதிக்கப்பட்ட வர்ஷா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார். அவர் தற்போது ஐசியு-வில் உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். சம்பந்தபட்ட நடிகை மீது வர்ஷா உறவினர்கள் பொலிசாரிடம் புகார் அளித்தனர். இது குறித்து பெங்களூரு பொலிசார் கூறியதாவது, சம்பந்தபட்ட நடிகை விபத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று அவரது உறவினர்கள் புகார் அளித்தனர். நாங்கள் நடிகையின் கைப்பேசியில் தொடர்பு கொண்டோம், ஆனால் அவரது போன் சுவிட் ஆப் செய்யபட்டு உள்ளது. அவரது வீடும் பூட்டப்பட்டுள்ளது, நடிகை பூஜா காந்தி தான் விபத்தை ஏற்படுத்தினார் என்று யாராவது சாட்சி கூறினால் அவர் மீது வழக்கு பதிவு செய்வோம் என்று கூறியுள்ளார். |
விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான நடிகை: பொலிசார் வலைவீச்சு
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.