கொஞ்சம் உஷாரா இல்லேன்னா கண்ணுல சிமென்ட்டை கொட்டி, ‘கலவை சுத்தமா இருக்கா தம்பீ?’னு கேட்டுருவாங்க. அந்த அனுபவத்தை மிக மிக சமீபத்தில் உணர்ந்து அன்றிலிருந்தே உஷாராகிவிட்டார் விஷால். இதனால் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியிருக்கிறாராம் சுசீந்திரன்.
வேறொன்றுமில்லை, ‘ஆம்பிள’ படத்தில் நடித்த வகையில் தனது முன்னேற்றத்திலிருந்து நாலடி பின்னோக்கி வந்துவிட்டாராம் விஷால். இத்தனைக்கும் படம் மப்சல் ஏரியாவில் ஹிட். நகர பகுதிகளில் சுமார் என்கிறது வசூல் விபரம். அது கூட வியாபார ஏற்ற இறக்கம் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால் தெலுங்கு படம் ஒன்றில் சமீபத்தில் வந்த காமெடி போர்ஷன் ஒன்றை அப்படியே சுட்டு ஆம்பள-யில் வைத்திருந்தாராம் சுந்தர்சி. இந்த விஷயம் லேட்டாகதான் தெரிய வந்தது விஷாலுக்கு. இது ஒருபுறம் இருக்க, ஆம்பள படத்தால் விஷாலுக்கு வந்த இமேஜ் இன்னும் சுத்தம். ஆளையே பொலிகாளை ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டார் சு.சி.
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு சுசீந்திரனை பிழிய ஆரம்பித்திருக்கிறாராம் விஷால். ‘பாண்டிய நாடு’ படத்தை தொடர்ந்து இருவரும் புதுப்படம் ஒன்றில் இணைகிறார்கள் அல்லவா? இந்த படத்தின் ஒன் லைனை மட்டுமே சொல்லியிருந்தாராம் சுசீந்திரன். இப்போது விஷாலிடம் தேதிகள் கேட்டு சென்றவரிடம், முழு கதையையும் சொல்லிடுங்க. அப்புறம் தர்றேன் தேதி என்றாராம். கதை வசனம் ரெடியாகாமல் ஷுட்டிங் செல்வதில்லை என்பதிலும் உறுதியாக இருந்துவிட்டாராம். ஏற்கனவே உங்களை வச்சு பாண்டியநாடுன்னு ஒரு நல்ல படம் கொடுத்திருக்கேன். அப்பவும் என் மேல நம்பிக்கை வரலயா? என்று அலுத்துக் கொண்ட சுசீந்திரனுக்கு விஷால் சொன்ன பதில், அவ்வளவு நாகரீகமாக இல்லை என்கிறது கோடம்பாக்கம் பட்சி.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.