ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். |
சுரேஷ் பாய் படேல் (57) என்ற இந்தியர், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் பொறியாளர் வேலை பார்க்கும் தனது மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 6ம் திகதி, அந்த பகுதியில் சுரேஷ் பாய் படேல் சுற்றி திரிந்ததை பார்த்து சந்தேகித்த ஒருவர் பொலிசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து அவரை சுற்றி வளைத்த அமெரிக்க பொலிசார், அவரிடம் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டுள்ளனர். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் பதில் அளிக்க முடியாமல், ‘நோ இங்கிலிஷ்’ என்று கூறி உள்ளார். அப்போது அவரை பொலிசார் ஒருவர் தரையில் தள்ளிவிட்டதால் அவர் முடங்கிப்போகிற அளவுக்கு காயம் அடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். இதுதொடர்பான புகாரில், அவரை தள்ளிவிட்ட பொலிசார் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். இதுபற்றி சுரேஷ் பாய் படேலின் மகன் சிராக் கூறுகையில், எனது அப்பா ஓய்வில் இருக்கும் போது அந்த பகுதியை நடந்து சென்று பார்த்திருக்கிறார். என் அப்பாவுக்கு இந்தியும், குஜராத்தியும் தான் தெரியும். ஆங்கில மொழி தெரியாததால் பொலிசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், சுரேஷ் பாய் படேலை இந்த நிலைக்கு தள்ளிய மேடிசன் பொலிஸ் மீது வழக்கு தொடர சிராக் திட்டமிட்டுள்ளார். |
ஆங்கிலம் தெரியாததால் இந்தியருக்கு அமெரிக்காவில் நேர்ந்த பரிதாபம்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.