‘என்னை அறிந்தால் பார்ட் 2’ எப்போது என்று இப்பவே கவுதம் மேனனை நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சில பத்திரிகையாளர்கள். ஆனால் அதற்கான அறிகுறி அஜீத் தரப்பில் இருக்கிறதா என்றால்… அதுதான் டவுட். கவுதம் மேனன் இந்த கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில் சொல்கிறாரோ, தெரியாது. ஆனால் அஜீத்திடம் கேட்டால், ஐ யம் ஸாரி என்றுதான் சொல்வார் போலிருக்கிறது. ஏனென்றால் இந்த படத்தின் ஷுட்டிங் சமயத்தில் மட்டும் அல்ல, அதற்கப்புறமும் இருவருக்கும் நடுவே லேசான நிழலிருட்டு என்கிறது கோடம்பாக்கம்.
படத்தின் க்ளைமாக்ஸ் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட இழுபறியை ரசிகர்கள் ஏற்கனவே அறிவார்கள். கதைப்படி அஜீத் இறந்துவிடுவதை போல காட்சியமைத்திருந்தாராம் கவுதம். ஆனால் அதற்கு அஜீத்தும் சரி, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும் சரி. சம்மதிக்கவே இல்லை. இந்த நிலையில்தான் கவுதம் வற்புறுத்தலுக்கு இணங்க, படத்தை ரஷ் காப்பி பார்க்க வந்திருந்தார் அஜீத்.
‘நீங்க இதுவரைக்குமான படத்தை பார்த்துட்டு அந்த க்ளைமாக்சை எடுக்கலாமா சொல்லுங்க?’ என்றாராம் கவுதம். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கதான் அந்த ஷோவுக்கு வந்திருந்தாராம் அஜீத்தும். படம் முடிந்ததும் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வத்தில் கவுதம் காத்திருக்க, ‘அதான்… என்னை கொன்னுட்டீங்களே, அப்புறம் தனியா வேற ஷுட் பண்ணி கொல்லணுமா?’ என்று கூறிவிட்டு விருட்டென்று எழுந்து கொண்டாராம் அஜீத்.
நல்லவேளையாக அவர் இறப்பதை போல படமாக்கவில்லை கவுதம். படமும் பெரிய வசூல் ஆகியிருக்கிறது. இந்த நிலையில் இருவரும் மறுபடியும் சேர்வதற்கான சூழ்நிலை அமையுமா என்பது என் கையில் இல்லை என்று வானத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறாராம் அஜீத். பல சமயங்களில் ‘இல்லை’ என்பதை சொல்வதற்கு பதிலாக மேலே கையை காட்டிதான் தப்பிக்க வேண்டியிருக்கிறது!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.