“விளம்பர படங்கள் மற்றும் மாடலிங் செய்து கொண்டிருக்கும்பொழுது சினிமா வாய்ப்புகள் வந்தன. சிறு வயது முதலே பாரம்பரிய நடனம் கற்று வந்ததால் நடிப்புக்கான பாவங்களைக் கொண்டு வருவது எனக்கு சுலபமாய் இருந்தது.
இருப்பினும் எனது முதல் படம் நல்ல கதையுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கேற்றாற்போல் இயக்குனர் வெங்கடேஷ் சார் இக்கதையை கூறினார். அவரைப் பார்த்ததும், ‘அங்காடி தெரு’ படத்தில் படுபயங்கரமாய் வரும் ஆளாயிற்றே இவர்..?” என்று பயத்தில் இருந்தேன். ஆனால், அப்படியெல்லாம் பயமுறுத்தாமல் இப்படத்தில் எனக்கு முழுக்க ஆதரவாக இருந்தார்.”
‘ரொம்ப நல்லவன்டா நீ’ நகைச்சுவை திரைப்படம். ஒரு தைரியமான படித்த பெண்ணாக வரும் நான் ‘மிர்ச்சி’ செந்தில் ஜோடியாக வருகிறேன். துளியும் அலட்டல் இல்லாதவர் செந்தில். இருப்பினும், ஷூட்டிங் முழுவதும் ‘ரோபோ’ சங்கருடன் சேர்ந்து என்னிடம் வம்பிழுத்துக் கொண்டே இருந்தார்கள். வம்பு என்றால் கலாய்ப்புதான்… ‘ரோபோ’ எப்பொழுதும் கலகலப்பானவர். அவர் இருந்தால் ஷூட்டிங் முழுதும் மகிழ்ச்சியாய் இருக்கும்..!”
ரோபோ… ரொம்ப நல்லவர்யா நீ(ங்க)..!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.