தமிழில் நடிக்காதது ஏன்? மாதவன் பேட்டி
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad

கடந்த 4 வருடத்துக்கு முன் தமிழில் திரைக்கு வந்த படம் ‘வேட்டை’. அதன்பிறகு இந்தி படங்களில் நடிக்கச் சென்றார். அங்கு அவர் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த கங்கனா ரனாவத் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார். இது குறித்து மாதவன் கூறும்போது, ‘இதன் முதல் பாகம் கடந்த 6 வருடத்துக்கு முன் படமாக்கப்பட்டது. எந்த இடத்தில் படம் முடிந்ததோ அதே இடத்திலிருந்து 2ம் பாகம் கதை தொடங்குகிறது. மிகவும் அருமையான படமாக உருவாகி வருகிறது. ஆனந்த் எல் ராய் இயக்குகிறார்’ என்றார். தொடர்ந்து அவர் கூறியது:கணவன் - மனைவிக்கு இடையேயான கதையாக உருவாகும் இப்படத்தில் தற்போது இரட்டை வேடங்களில் நான் நடித்து வருகிறேன். கங்கனாவுக்கும் இரட்டை வேடம். தமிழில் நீண்ட இடைவெளி விட்டிருப்பது நிஜம்தான். ஆனால் இது நான் விரும்பியது கிடையாது. அடுத்தடுத்து இந்தி படங்கள் கமிட் ஆகிவிட்டதால் தமிழில் நடிக்க முடியாமல் போனது. இனி தமிழிலும் முழு வீச்சில் கவனம் செலுத்துவேன்.
0 comments:
Post a Comment