ஐந்தாவது செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் விரைவில் நடக்க உள்ளது. தமிழ் நடிகர்கள் சென்னை ரைனாஸ் என்ற பெயரில் கடந்த நான்கு லீக் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
சென்னை அணிக்கு இதுவரை கேப்டனாக இருந்தவர் நடிகர் விஷால். இரண்டுமுறை அவரது தலைமையிலான சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் ஐந்தாவது லீக் போட்டியில் தனது கேப்டன் பதவியை துறப்பது என முடிவு செய்துள்ளார். அவருக்குப் பதில் கேப்டன் பொறுப்பை நடிகர் ஜீவா ஏற்றுக் கொள்கிறார்.
வரவிருக்கும் நடிகர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிட இருப்பதால் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.