↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டில் பெரும்புகழ் பெற்ற பாபிசிம்ஹா, சமீபத்தில் தேசிய விருதும் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தற்போது அவர் முதன்முதலாக ஹீரோவாக நடித்த 'உறுமீன்' திரைப்படம் வெகுவிரைவில் ரிலீஸாகவுள்ளதால் அவர் பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பாபிசிம்ஹா, 'உறுமீன் படத்தின் இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி தமிழ் ரசிகர்களுக்கு புதுவிதமான திரைக்கதையில் ஆக்ஷன் த்ரில்லர் படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளார். நிச்சயம் இந்த படம் தமிழ் ஆடியன்ஸ்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும்' என்று கூறினார்.

மேலும் ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்த தனக்கு தேசிய விருது கிடைத்ததற்காக அந்த படத்தின் ஹீரோ சித்தார்த் தன் மீது பொறாமைப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியை மறுத்த பாபிசிம்ஹா, 'இந்த வதந்தி எப்படி கிளம்பியது என்றே தெரியவில்லை. உண்மையில் நானும் சித்தார்த்தும் நெருங்கிய நண்பர்கள். இந்த படத்திற்காக கண்டிப்பாக எனக்கு விருது கிடைக்கும் என அவர் முன்பே என்னிடம் கூறியிருந்தார். அவருடைய வாக்கு பலித்துள்ளது. மேலும் எனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதும் எனக்கு வாழ்த்து தெரிவித்த முதல் நபர் சித்தார்த்தான். அவர் என்றைக்குமே என்னுடயை ஹீரோதான்' என்று கூறியுள்ளார்.

மேலும் பாபிசிம்ஹா தற்போது மசாலாபடம், பாம்புச்சட்டை, வல்லவனுக்கும் வல்லவன், இறவி மற்றும் பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top